மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். மாணிக்கவாசகர் திருபெருந்துரையில் குருத்தை மாற நிழலில் குருவடிவாய் ஈசன் கட்டளை இட்டு அருளியபடி அடியவர்களுடன் ஓரி இடத்தில் சிவபெருமான் திருவடிகளை செய்து வழிபட்டு வருகையில் பொய்கையில் எழுந்து தீயில் அடியவர்கள் மூழ்கியதும் தான் மூழ்காமல் சிவபெருமான் இயம்பியவாறு உத்திர கோச மங்கை சென்று எண்வகை சித்தியும் பெற்று தேவர்கள் வரம் வேண்டி இறைஞ்சம் தெய்வீக வளம் பொருந்திய திருகழுகுன்றினை அடைந்தார்
சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளியவாறு வழகாதிருந்து அளவிலடன்காத தம் திருஉருவத்தை காட்டியருளினார். கானுதற்கரிய அக்காட்சியினை கண்டு கண்களில் ஆனந்த கண்ணீர் பொழிய நின்று யாவரிடத்திலும் மாறுபாடில்லாத திருபெருந்துரையில் வீற்றிருக்கும் பெருமானே உன்னுடைய திருபெயர்களை எடுத்தியம்புகின்றவர்களுக்கு நிகரற்ற சிறந்த பேரின்பம் உண்டாகும். எமது தலைவனாகிய நீ துயரங்களை ஒழித்து தனிதன்மை உடைய பிறவி விதையானது மேலே விளையாதபடி இருவினை யொப்பு எனக்கு வந்த பிறகு அளவிலடந்காத உனது திருவடிவத்தை திருகழுகுன்றத்தே எழுந்தருளி வந்து கான்பித்தருளினை. மாணிக்கவாசகர் இத் தலத்தில் சில நாட்கள் தங்கி இருந்து தாம் திருபெருந்துரையின் அடியவர்களுடன் வழிபட்ட திருவடிகளை திருமலையின் மீது ஏறும் வழியில் அருகு வைத்து மண்டபம் கட்டி வழிபட்டார். இதற்கு அறிகுறியாக திருமலையின் மீது ஏறும் வழி தொடங்கும் இடத்தில் மேல்புறத்தில் மண்டபமும் அதில் சிவபெருமான் திருவடி நிலைகளும் மாணிக்கவாசகர் திருவுருவமும் இருக்கின்றன.
பாடல் எண் : 1
பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்(கு)
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணாக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீ வந்து
காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 2
பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்டனேசிவ லோகனே சிறு
நாயி னுங்கடை யாய வெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வாள் வான்வந்து
காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 3
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேண்
இலங்கு கின்றநின் சேவடிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 4
பூணொ ணாததொ ரன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறூம் போற்றவும்
நாணொ ணாததொர் நானம் எய்தி
நடுக்கடலுள் அழுந்தி நான்
பேணொ ணாதபெ ருந்துறைப் பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 5
கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமனி
ஞாலமேகரி யாக நானுனை
நச்சி நச்சிட வந்திடிங்
கால மேஉனை ஒதநீ வந்து
காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 6
பேதம் இல்லாதொர் கற்ப ளித்த
பெருந்துறைப் பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதிலார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீ வந்து
காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 7
இயக்கி மாரறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்ம லப்பழ
வல்வி னைக்கள் அழுந்தவும்
துயக்க றுத்தனை ஆண்டு கொண்டு நின்
தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனே வந்து
காட்டினாய்கழுக் குன்றிலே